சி.ஜ.டி எனக் கூறி ஒரு இலட்சம் மோசடி!! -பெண் உட்பட 4 பேர் கைது-
யக்கல பகுதியில் பெண் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் என தெரிவித்து மோசடி செய்து பெற்றுக் கொண்ட பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் இது குறித்த கம்ஹா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மல்வதுபிரிடிய பகுதியில் மறைந்திருந்த நிலையில் அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.