Fri. May 10th, 2024

சடலமாக மீட்கப்பட்ட இரு சிசுக்கள்!! -தீவிர விசாரணையில் இறங்கிய பொலிஸ்-

நுவரெலியா நேஸ்பி தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலையில் இருந்து உயிரிழந்த நிலையில் இரு பெண் சிசுக்களின் சடலங்களை நுவரெலியா பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

தோட்ட தேயிலை மலையில் வீசி எறியப்பட்ட குறித்த சிசுக்கள் தொடர்பாக பொதுமக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்று, சிசுக்களின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, கண்டெடுக்கப்பட்ட சிசுக்கள் தொடர்பாக தீவிர விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் சிசுக்களின் தாயார் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த சிசுக்கள் கொலை செய்யப்பட்ட பின்னர், வீசி எறியப்பட்டிருக்கலாமென நுவரெலியா பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிசுக்களின் சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சிசுக்களின் தாயாரை தேடும் நடவடிக்கையினை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்