Fri. Apr 26th, 2024

கோரோனோ உச்சத்திலும் வெளிமாவட்ட வியாபாரிகள் வடமராட்சி வீதிகளில்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நடமாடும் வியாபாரங்கள் சட்டரீதியற்ற முறையில் சுதந்திரமாக இயங்க தொடங்கியிருக்கின்றது. பிரதான வீதிகளின் வீதியோரங்கள், சந்திகள், வெற்று தோட்டக் காணிகள் என்பவற்றில் இக் கொரோனா காலத்திலும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய தினம் நெல்லியடி பிரதான வீதியில் நாவலப்பிட்டி எனும் பிரதேசத்தில் இருந்து வந்த சிலர் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இது தொடர்பாக நெல்லியடி வர்த்தக சங்க செயலாளர் கருத்து தெரிவிக்கும் பொழுது ” எமது பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் வர்த்தக சங்கம் என்ற ரீதியில் எனக்கு தெரியப்படுத்தி இருந்தார்கள். உடனடியாக விரைந்து செயற்பட்ட நான், கரவெட்டி சுகாதார அதிகாரியிடம் தொலைபேசி ஊடாக முறையிட்டேன். உடனடியாக கொரோனா பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார். இதற்கிடையில் அவ்விடத்திற்கு சென்ற நான் நெல்லியடி பொலீஸ் பொறுப்பதிகாரியிடம் முறையிட்டு அவர்களின் உதவியுடன் அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றிருந்தேன். இவ் நடவடிக்கைகளுக்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கும் கரவெட்டி சுகாதார அதிகாரி அவர்களுக்கும் நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களுக்கும் நன்றிகள்” என்று தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்