Fri. May 10th, 2024

இளைய தளபதிக்கு தாய் எழுதிய வைரல் கடிதம் ..

இளையதளபதி விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் தனது மகனான விஜய்க்கு எழுதியதாக ஒரு கடிதம் ஒன்று சமூகவலை தளங்களில் வைரல் ஆகிவருகின்றது.
இந்த கடிதத்தில் ஷோபா கூறியாதவது,
” ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து பின் தாயின் உள்ளம் நோக்கி வரும். அவளும் உச்சி முகர்வாள். ஆனால் , நான் பெற்ற பிள்ளை இன்று கோடானுகோடி தாய்மார்கள் , ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களும் அதை தளபதியாய் கொண்டாடிக் கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் சிறு ஈரம் கசிந்து வலிக்கிறது. அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க விஜய் உன்னைப்பற்றி. நீ என் கரம் பற்றி நடந்ததை , பின் நடந்ததை எல்லாம் ( ஏற்றம். இறக்கம் , தோற்றல் , போற்றல் ) அசை போட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சி குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிற அந்த நுண்ணிய உணர்வுகளை எந்த காகிதத்தில் வடிப்பது. அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்ப்பரிக்கும் இளவயதில் கூட நீ அமைதியின் அவதாரமாய் இருக்கையில் , இயங்குகையில் என் ஆழ்மன ஊற்று பெருகி ஆனந்தம்
வடிகையில் அதை எந்த பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்.

நீ உன் அழுகை நிறுத்தி , முதல்முதல் உன் பூவிதழ் விரித்து , புன்னகைத்தது முதல் இன்று உன் இதயத்தளவு ரசிகர்களின் பெரு வெள்ளத்திற்கு இடையே இன்பத்தளிப்பில் நீ புரியும் புன்னகையை விவரிக்க ..தேடி கிடைக்காமல் வார்த்தைகளை கடன்வாங்கும் ( கோடி கோடியாய் பொருள் இருந்தும் ) நிலையை ஒரு சிறப்பித்தழுக்குள் என்னால் எப்படி எழுதி விட முடியும்?
சுருங்கக்கூறின் எம் .கே .தியாகராஜா , எம்.ஜி .ராமசந்திரன் , ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில் , தாய் என்பதெல்லாம் மறந்து
ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்..” என்று கூறியுள்ளார் அந்த கடிதத்தில்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்