ஆசிய மினி ஒலிம்பிக்கில் யூனியன் கல்லூரி மாணவிகள் ஐவர் பங்கேற்பு
பாடசாலைகளுக்கு இடையிலான இரண்டாவது ஆசிய மினி ஒலிம்பிக் எறிபந்தாட்டத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியை மாணவிகள் ஐவர் இலங்கையைப் பாடசாலைகள் தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளனர்.
இரண்டாவது ஆசிய மினி ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு அங்கமான எறிபந்தாட்டத் தொடர் நாளை மறுதினம் 27ம் திகதியிலிருந்து 29ம் திகதி வரை மலேசியாவில் நடைபெறவுள்ளது.
இத் தொடரில் இலங்கை பாடசாலைகள் தேசிய அணியைப் பிரதிநிதித்துவம் செய்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவிகளான பா.சதுர்ஜா,
ப.ரேணூகா, க.றம்மியா, ஈ.டக்சனா, த.குயின்சிகா ஆகியோர் கலந்து கொள்ளவுள்னர். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி பெண்கள் அணி கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டிகளில் 17 வயதுப் பிரிவினர் தங்கப் பதக்கத்தையும், 20 வயதுப் பிரிவினர் வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.