3ம் தவணை ஆரம்பிப்பது எப்போது
மூன்றாம் தவணைக்கான பாடசாலைகள் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பிப்பது கேற்விக்குறியாகவே உள்ளது. கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களினால் இன்று (16) ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் அவர் உரையாற்றுகையில் சுகாதார துறையின் அனுமதி கிடைத்தவுடன் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடியே பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் . இம்மாதம் 9ம் திகதி மூன்றாம் தவணை ஆரம்பிக்கபடவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ளது அசாதாரண சூழ்நிலையால் எதிர்வரும் 23ம் ஆரம்பித்து தொடர்பாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைவருடனும் கலந்தாலோசித்த பின்னரே முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.