வாள் வெட்டில் இருவர் காயம்
வாள் வெட்டு காயங்களுக்கு உள்ளான இளைஞர்கள் இருவர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று மதியம் கொழும்புத்துறை பகுதியில் நிகழ்ந்துள்ளது .
காயமடைந்தவர்களில் ஒருவர் போதனா வைத்தியசாலையிலும், மற்றவர் குருநகர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன .