சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட 13000 சிகரெட்டுகள் மீட்பு
இன்று அதிகாலை துபாயில் இருந்து வந்த விமான மூலம் கடத்தி வரப்படட 13000 சிகரெட்டுகளும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டதுடன் சம்பந்தப்படடவருக்கு 50000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. சந்தேக நபரான 33 வயதுடையவர் காலி இமாடுவா பிரதேசத்தை சேர்ந்த வியாபாரியாவார் என விமான நிலைய சுங்க அதிகாரி தெரிவித்தார்