Thu. May 16th, 2024

வவுனியாவில் 26 பேருக்கு தொற்று

வவுனியாவில் நேற்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போன்றவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (28.05) இரவு வெளியாகின.
அதில், வவுனியா திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், இராசேந்திரன்குளம் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த இரண்டு பேருக்கும்,
தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், சூசைப்பிள்ளையார் குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், கோயில்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,

உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், குட்செட் வீதியைச் சேர்ந்த ஒருவருக்கும், செட்டிகுளம் பகுதியில் ஒருவருக்கும், பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்