வடக்கில் நேற்று 194 பேருக்கு கோரோனோ தொற்று
நேற்றைய தினம் இடம்பெற்ற PCR பரிசோதனை முடிவுகளின் படி கிளிநொச்சி -94 , வவுனியா -24, யாழ்ப்பாணம் -22, முல்லைத்தீவு – 53 மன்னார் -01வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது
இதன்மூலம் வடக்கில் நேற்று மொத்தம் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இலங்கையில் மிக அதிகளவாக களுத்துறை மாவட்டத்தில் நேற்று 512 தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். கம்பஹா – 443, கொழும்பு 281, கண்டி271, குருநாகலில் 177 தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நாட்டில் நேற்று மொத்தம் 2,850 கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மொத்த தொற்று நோயாளர் தொகை 177,710 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே நேற்று 39 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் மொத்த மரணங்கள் 1,363-ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது