சந்தை வியாபாரிகளுக்கே முன்னுரிமை-ஐங்கரன் தெரிவிப்பு
சந்தை வியாபாரிகளுக்கே நடமாடும் சேவையில் முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
கரவெட்டி பிரதேச செயலகத்தினால் நடமாடும் சேவையில் ஈடுபடும் மரக்கறி வியாபாரிகள் மற்றும் மீன் வியாபாரிகள் தொடர்பான விபரம் கரவெட்டி பிரதேச சபையினரிடம் கோரப்பட்டது. இந்நிலையில் நெல்லியடி மற்றும் உடுப்பிட்டி சந்தையில் மரக்கறி வியாபாரிகள் சுமார் 60 வியாபாரிளும் , 40 மீன் விற்பனையாளர்களும் அடங்கலான பெயர்ப் பட்டியல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் இரு வியாபாரிகள் மூலம் நிறுவப்பட்டு அவர்களுக்கு அனுமதி அடையாள அட்டையும் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று கரவெட்டி பிரதேச செயலகம், நெல்லியடி பொலீஸ் குழு, கரவெட்டி பிரதேச சபை என அனைவரும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.