Sun. May 19th, 2024

வவுனியாவில் நேற்று இருவர் கொரோனாவால் மரணம்

வவுனியாவில் பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளதையடுத்து நேற்று வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் மரணமடைந்தூள்ளதாக பதிவாகியது.
வவுனியா, தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று  இரவு குறித்த பெண் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்.
வவுனியா, தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
வவுனியா, மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் இன்று மரணமடைந்த நிலையில் இது வவுனியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது கொவிட் மரணமாகும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்