வவுனியாவில் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது
வவுனியாவில் இன்று மாலை தொடக்கம் 24ம் திகதி வரை சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்கள் வெளியில் நடமாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா நகரினை முடக்குவதற்கு தாம் பரிந்துரை செய்துள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வவுனியா நகரிலிருந்து நெளுக்குளம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து தாண்டிக்குளம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து வன்னி இரானுவ முகாம் வரையும் , வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து மாமடுவ சந்தி வரையிலுமான பகுதிகள் முடக்கப்படுவதுடன் மக்கள் வெளிச்செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டு மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.