Fri. May 17th, 2024

வடமராட்சியில் தாலிக்கொடி அறுத்த பெண் மடக்கி பிடிப்பு

வடமராட்சி தொண்டைமானாறு பகுதியில் சுகாதார பிரிவினர் எனத் தெரிவித்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை மடக்கிப் பிடித்து பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று தொண்டைமானாறு பகுதியில் நடைபெற்றுள்ளது.  பெண் ஒருவர் தன்னை சுகாதார பிரிவினர் எனத் தெரிவித்து பல வீடுகளில் நோட்டம் விட்டுள்ளார்.  இதேபோல் தொண்டைமானாறு பகுதியில் தனித்திருந்த பெண்ணின் வீட்டில் சென்று தான் சுகாதார பிரிவினர் எனத் தெரிவித்து வீட்டை சுற்றிப் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  அப்போது வீட்டில் யாரும் இல்லை என்பதனை புரிந்து கொண்டவர் வீட்டுப் பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளார். உடனடியாக வீட்டுப் பெண் கூக்குரல் இட்ட போது அப்பகுதி மக்களால் துரத்திச் செல்லப்பட்டு தொண்டைமானாறு  பலாலி வீதி அன்ரனிபுரத்தில் வைத்து மடக்கிப் பிடித்து பலாலி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குறித்த களவுச் சம்பவம் தொண்டைமானாறு பகுதியில் நடைபெற்றமையால் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குறித்த பெண்ணின் கைப்பையில் தாலிக்கொடி உட்பட பல நகைகள் மற்றும் பணங்களும் காணப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்