வற்றாப்பளையில் பனை விதைகள் நாட்டி வைக்கப்பட்டது
முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலய சூழலில் பனம் விதைகள் இன்று (7) நாட்டி வைக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினால் ஒரு மில்லியன் மரங்கள் நடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 3ம் கட்ட செயற்பாடாக கரைத்துறைப்பற்று இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பில் இன்று முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயச் சூழலில் பனை விதைகள் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் மேலதிக அரசாங்க அதிபர், கரைத்துறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளை உறுப்பினர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆயிரம் பனை விதைகள் நாட்டும் திட்டம் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.