வடமாராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு போட்டோ பிரதி இயந்திரம் கையளிப்பு
“ஜெம் புறஜெக்ற்” திட்டத்தின் கீழ் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் மாணவர்கள் பாவனைக்காக போட்டோ பிரதி எடுக்கும் இயந்திரம் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.
இன்று பாடசாலைக்கு வருகை தந்த வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்களால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியபாலன், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.