Tue. May 14th, 2024

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்  ப. சுரேஸ் அவர்களால் தெரிவு செய்யபட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடியில் தாயகத்தில் கற்றலுக்கான உபகரணங்களின் விலைகள் சரியாக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் தாயகத்தில் நாளாந்த உழைப்பில் இருக்கும் பல குடும்பங்களின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றது. பல பிள்ளைகளின் பெற்றோர் எம்மை தொடர்பு கொண்டு நிலமைகளை கூறி உதவிகளை கேட்டனர்.
தாயகத்தில் கற்றலுகான பல உதவிகளை புலம்பெயர் நண்பரகளின் உதவியுடன் எமது மக்களுக்கு மேற்கொண்டு வருகிறோம்..
 அதன் தொடர்ச்சியாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஊடாக வசதி குறைவான குடும்பங்களின் பிள்ளைகள் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.  கடந்த இரு நாட்களாக 63 பிள்ளைகளுக்கு  75000/= பெறுமதியான உபகரணங்கள்  வழங்கப்பட்டு உள்ளன.
தொடர்ச்சியாக பல மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்