Tue. May 14th, 2024

பருத்தித்துறையில் சிறுமி பொலீஸாரால் பாலியல் வன்புணர்வு – அதிர்ச்சி சம்பவம்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை 2 ஆண்டுகளாக இரண்டு தமிழ் பொலிசார் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கி வந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரை இன்று செவ்வாய்கிழமை பருத்தித்துறை பொலீஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
சிறுமியை வன்புணர்விற்குள்ளாக்கிய போது, அதை காணொலியாக எடுத்து, அதை வைத்து மிரட்டியே இந்த கொடூரத்தை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து, அப்போது 17 வயதாக இருந்த சிறுமியை இரண்டு தமிழ் பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்களில்லாத வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்