வடமாகாண சந்தைகள் திங்கள் முதல் வழமைக்கு
வடமாகாண சந்தைகள் திங்கள் முதல் மீளத் திறப்பதற்கு மாகாண சுகாதார பிரிவு வடமாகாண உள்ளூராட்சி திணைக்களத்திற்கு அனுமதியளித்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் நியூஸ் தமிழ் செய்தி பிரிவிற்கு அறிவித்துள்ளார்
கொரோனா அபாயம் காரணமாக வடமாகாணத்தில் முடக்கப்பட்டிருந்த சந்தைகளை மீள திறப்பதற்கு மாகாண சுகாதார பிரிவு அனுமதியளித்துள்ளது.
சந்தைகளை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல் ஒன்று இன்று மாகாண சுகாதார பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
இதன்படி எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் மாகாணத்தில் உள்ள சகல சந்தைகளையும் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் திருமண மண்டபங்களை திறக்கவும், 150 பேருடன் திருமணங்களை நடத்தவும் அனுமதி வழங்கப்படுவதென இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.