மருதங்கேணியில் இன்று 109 பேருக்கு PCR
மருதங்கேணி பகுதியில் கொரோனா தொற்றாளருடன் நேரடித் தொடர்பிலிருந்த 109 பேருக்கு இன்று PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருதங்கேணி சுகாதார பணிமனையால் இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருதங்கேணி பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் எனக் கருதப்படும் 109 பேருக்கே PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மருதங்கேணி சுகாதார பணிமனைக்குட்பட்ட குடத்தனை, பொற்பதி, நடுக் குடத்தனை போன்ற பகுதிகளைச் சேர்ந்தோருக்கே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.