Tue. May 14th, 2024

வடமாகாணத்தில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வடமாகாணத்தில் இன்று  திங்கட்கிழமை 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 66 பேருக்கும்,  யாழ் மாவட்டத்தில் 33 பேருக்கும்,  கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேருக்கும்,  வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்கும்,  மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும் என 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 61 பேருக்கும்,  புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 3 பேருக்கும்,  முல்லைத்தீவு வைத்தியசாலையில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் 7 பேருக்கும்,  சாவகச்சேரி வைத்தியசாலையில் 3 பேருக்கும்,  பருத்தித்துறை, சங்கானை,  தெல்லிப்பளை  வைத்தியசாலைகளில் தலா ஒருவருக்கும்,  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளான யாழ் சுகாதார பிரிவில் 9 பேருக்கும்,  சாவகச்சேரி சுகாதார பிரிவில் 9 பேருக்கும்,  சண்டிலிப்பாய்,  நல்லூர்,  உடுவில் சுகாதார பிரிவில் தலா ஒவ்வொருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி வைத்தியசாலையில் 5 பேருக்கும்,  தருமபுரம் வைத்தியசாலையில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் 3 பேருக்கும்,  தனிமைப்படுத்தல் பிரிவில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட த்தில் மன்னார் வைத்தியசாலையில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்