Wed. May 15th, 2024

புதுக்குடியிருப்பில் இரு கிராம அலுவலகர் பிரிவுகள் முடக்கம்

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இரு கிராம சேவகர் பிரிவுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 960 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவு மற்றும் கரைத்துறைப்பற்று கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் வெளியில் செல்லவோ அல்லது வெளியில் இருந்து உட்செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்