வடமராட்சி விபத்து வயோதிபர் காயம்
நெல்லியடி கொடிகாமம் வீதியில் துன்னாலைப் பகுதியில் வயோதிபர் ஒருவர் விபத்திற்குள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கம்பட்டு மேலதிக சிகிச்சைக்கா யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து சற்று முன்னர் நடைபெற்றது. விபத்தில் மந்திகை புலோலியைச் சேர்ந்த மாசிலாமணி சிவசண்முகம் (வயது 73) என்பவரே காயமடைந்துள்ளார். இரு மோட்டார் வாகனங்களும் விபத்திற்குள்ளான நிலையிலேயே இவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மோட்டார் சையிக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் இவருடன் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது.