வடமராட்சி வல்லிபுரக் கோயிலுக்கு பின்புறமாக கஞ்சா மீட்பு
வடமராட்சி வல்லிபுரக் கோயிலுக்கு பின்புறமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் 90 கிலோ உள்ள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
வல்லிபுர கோயிலுக்கு பின்புறமாக உள்ள காட்டுப் பகுதியில் குறித்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பருத்தித்துறை பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எவரும் கைது செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.