வடமராட்சி மக்கள் வங்கி கிளைகள் இயங்கும் திகதிகள்
வடமராட்சியில் உள்ள மக்கள் வங்கி கிளைகள் இயங்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
நாளை (02) புதன்கிழமை பருத்தித்துறை மக்கள் வங்கி கிளையும் எதிர்வரும் 4ம் திகதி வல்வெட்டித்துறை மக்கள் வங்கி கிளையும் எதிர்வரும் 7ம் திகதி நெல்லியடி மக்கள் வங்கி கிளையும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது
பயணத் தடை மற்றும் கொவிட் தொற்று காரணமாக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களும் தமது அசெளகரியத்தை பார்க்காது பணம் மீளப் பொறல், பணம் வைப்பிலிடல் போன்ற செயற்பாடுகளை இயந்திரங்கள் மூலமும் மிக அவசியமான தேவையேற்படின் மட்டும் கிளையினுள்ளும் வருகை ச
தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் வங்கிக்கு முன்பாக ஒன்று கூடுவதைத் தவிர்த்து சமூக இடைவெளியைப் பேணி சுகாதார நடைமுறைகளை கடைப்படிக்குமாறும் அறிவித்துள்ளனர்.