Thu. May 16th, 2024

மாவட்ட கோட்டாவை இழக்கும் தமிழ் மாணவர்கள் ப.தர்மகுமாரன் சுட்டிக்காட்டு

இலங்கையில் உள்ள பல்கலைகழகங்களில் மாவட்ட கோட்டாவை இழக்கும் தமிழ் மாணவர்கள் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் ப தர்மகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார். பல்கலை கழகங்களில் பல துறைசார்ந்த கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டு தொழில் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது ஆனால் தமிழ் மாணவர்கள் இக் கற்கைநெறிகளை தெரிவு செய்யாது மாவட்ட கோட்டாவை இழப்பதுடன் வேலைவாய்ப்பையும் இழந்து பட்டப்படிப்பையும் இழக்கின்றனர். பின்னர் அதிகளவு பணத்தை செலவு செய்து பட்டத்தை பெறுவதுடன் அரசின் இலவச கல்வியையும் இழக்கின்றனர். இதற்கு மொழியும் ஒரு பிரச்சனையாக உள்ளதுடன் ஆசிரியர்களின் துறைசார்ந்த வழிகாட்டலும் குறைவாக உள்ளது. ஏனெனில் 3S சித்தியுடன் துறைசார்ந்த பாடங்களுக்கு விண்ணப்பித்து எமது மாவட்ட கோட்டாவை தக்கவைப்பதுடன் பட்டத்தையும் பெற்றுக்கொள்ளலாம் எனவே விண்ணப்பிப்பதை தவறவிடாது ஆசிரியர்களின் உதவியைபெற்றுக்கொள்ளவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்