Thu. May 16th, 2024

மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு சுகாதார பாதுகாப்பு பொருட்கள்

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டலிற்கு அமைவாக சர்வதேச மற்றும் தேசியரீதியான அரசசார்பற்ற அமைப்புக்கள் ஊடாக நாட்டினுள் வேகமாக பரவும் கொவிட் -19 தொற்றுநோய் சூழலிற்கு மத்தியில் பணியாற்றும் கிராம சேகவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிற்கு அத்தியாவசிய சுகாதார பாதுகாப்புப் பொருட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

யாழ்ப்பாண மாவட்ட செயலக அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் Paalam project அரச சார்பற்ற நிறுவனத்தினரால் (31)அன்று இருநூறு பேரிற்கான 1000 ரூபா பெறுமதியான உலர்உணவுப் பொருட்கள் (அரசி, மா, சீனி, பருப்பு, தேயிலை, சோயா) மற்றும் அத்தியாவசிய சுகாதார பாதுகாப்புப் பொருட்களான 1500 Face mask, 3000 Face shield ஆகிய வழங்கி வைக்கப்பட்டன. இவ் உலர் உணவுப் பொருட்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களிற்கு வழங்கப்படவுள்ளது அத்தோடு சுகாதார பாதுகாப்பு பொருட்கள் பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்