Fri. May 17th, 2024

4500 மது விற்பனை நிலையங்களுக்கு சீல்

இலங்கை முழுவதும் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் மறு அறிவித்தல் வரையில் திறக்க முடியாதவகையில் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக நாடு பூராகவும் 4500 மதுபான விற்பனை நிலையங்களுக்குச் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன என்று கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

பயணக் கட்டுப்பாடு காரணமாக மே 21ஆம் திகதி முதல் நாடு பூராகவும் மதுபான விற்பனை நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், சில பிரதேசங்களில் கட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் இரகசியமான முறையில் மதுபான விற்பனை நிலையங்களைத் திறந்து வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்று கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே அவற்றுக்குச் ‘சீல்’ வைக்க தீர்மானிக்கப்பட்டது என்றும் கலால் வரித் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்