யாழ் நூலகம் எரிக்கப்பட்ட 40 ஆம் ஆண்டு நினைவு நாள்
இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட 40 ஆம் ஆண்டு நினைவு நாள். 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி (மே 31 நள்ளிரவு) நூலகம் எரித்து தீக்கிரையாக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான எந்தவித நிகழ்வுகளுக்கும் பயணத்தடையை காரணம் காட்டி யாழ் பொலிஸாரால் தடை விதிக்கப்படுள்ளது. யாழ் மாநகரசபை முதல்வர் தலைமையில் நினைவு நிகழ்வுகள் இடம்பெறவிருந்த நிலையில் , யாழ்ப்பாண பொலிஸாரால் இதற்கு தடைவிதிக்கப்படுள்ளது குறிப்பிடதக்கது