Thu. May 16th, 2024

வடமராட்சி கிழக்கில் வெடி பொருட்கள் மீட்பு

வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் மலசல கூடம் அமைப்பதற்கான குழி தோண்டப்பட்ட போது வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று அம்பன் பகுதியில் வீடு ஒன்றில் கழிப்பறைக்கு குழி தோண்டும் போது வெடிபொருட்கள் சில தென்பட்டுள்ளன..இதனையடுத்து பருத்தித்துறை பொலிஸருக்கு அறிவிக்கப்பட்டது. பருத்தித்துறை பொலீஸார் மற்றும்  விஷேட அதிரடிப் படையின் உதவியுடன் அப்பகுதி தோண்டப்பட்ட போது கிளைமோர் குண்டுகள் 4, ஆர்பிஜி குண்டுகள் 6, கைக்குண்டுகள் 38, கிளைமோர் சுவிட்ச் 6, என்பன மீட்கப்பட்டுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்