கணபதி அறக்கட்டளையால் மதிய உணவும், உடுபுடவைகளும் வழங்கி வைப்பு
கணபதி அறக்கட்டளை மற்றும் GSHL ஊடாக வழங்கப்பட்டு வரும் உதவி திட்டத்தின் கீழ் நேற்று மதிய உணவு மற்றும் உடுபுடவைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
அல்வாய் தெற்கை சேர்ந்த அமரர் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்களின் 12 ம் ஆண்டு நினைவு நாளான நேற்று மதிய உணவும் உடுபுடவைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
அமரர் கணபதிப்பிள்ளை அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகளின் நிதியுதவியுடன் 200 பேருக்கான மதிய உணவும், மற்றும் 50 குடும்பங்களுக்கான பயன் தரும் மாமரக் கன்றும் மற்றும் நிர்வாகி கண்ணன் சுவிட்சர்லாந்தில் இருந்து அனுப்பி வைத்த பெறுமதியான இரண்டு பெட்டி உடு உடைகளும் அல்வாய் தெற்கு கிராம மக்களிற்கு நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.