Fri. May 17th, 2024

உயர்தர மற்றும் புலமை பரிசில் பரிட்சை விண்ணப்பதிகதி செப்டம்பர் 15 வரை நீடிப்பு

நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கல்வி அமைச்சு 2021 ஜி.சி.இ.உயர்தர (A / L) மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்ப திகதியை செப்டம்பர் 15 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பரீட்ச்சை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.doenets.lk அல்லது திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி “DoE” ஐப் பார்வையிட்டு தொடர்புடைய வழிமுறைகளை கவனமாகப் படித்து அதன்படி ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பாவனை பெயர்கள்(USERNAME ) மற்றும் கடவுச்சொற்களைப் (PASSWORD )பயன்படுத்தி மாணவர்கள் மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்களின்படி விண்ணப்ப படிவத்தை நேரில் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதன்பிறகு, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் நகலைப் பெற்று, தேவைப்படும்போது வழங்குவதற்கு அவர்களிடம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்