வடமராட்சி கிழக்கில் சட்ட விரோத மணல் அகழ்வு ஒருவர் கைது
வடமராட்சி கிழக்கு மாவடிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தையும் ஒருவரையும் இன்று வெள்ளிக்கிழமை காலை அதிரடிப்படையினரால் கைது செய்து பருத்தித்துறை பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு மாவடிப் பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை அதிரடிப் படையினர் தடுத்து நிறுத்த முற்பட்ட போது உழவு இயந்திரத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் அதிரடிப் படையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து சாரதியால் உழவு இயந்திரம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து குறித்த நபரையும் உழவு இயந்திரத்தையும் பருத்தித்துறை பொலீஸாரிடம் அதிரடிப்படையினர் ஒப்படைத்தனர்.