வடமராட்சியில் 8 பேருக்கு கொரோனா
இன்று வெள்ளிக்கிழமை வடமராட்சியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றாளருடன் நேரடித் தொடர்பு கொண்ட பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 4 பேருக்கும், பருத்தித்துறை சுகாதார பிரிவில் மூவருக்கும், கரவெட்டி சுகாதார பிரிவில் ஒருவருக்கும் என 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.