இன்று 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இன்று வெள்ளிக்கிழமை வடமாகாணத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இன்று பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 585 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இதில் யாழ் வைத்தியசாலைகளில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 4, யாழ் போதனா வைத்தியசாலையில் 2 நொதேண் தனியார் வைத்தியசாலையில் ஒருவருக்கும், சுகாதார பிரிவில் கொடிகாமம் சந்தையில் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட சாவகச்சேரி சுகாதார பிரிவில் 24, யாழ்ப்பாணம் சுகாதார பிரிவில் 8, வேலணை சுகாதார பிரிவில் 4, பருத்தித்துறை சுகாதார பிரிவில் 3, கரவெட்டி சுகாதார பிரிவில் 1, யாழ் சிறைச்சாலையில் ஒருவருக்கும்,
வவுனியா மாவட்டத்தில் 9 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் இருவருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் என 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலை முடிவுகள் இன்று வெளியாகவில்லை.