கரணவாயில் கோழிப் பண்ணைக்கு சீல்
கட்டுப்பாட்டு விதிகளை மீறி இயங்கிய கோழிப் பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று கரணவாய் பகுதியில் நடைபெற்றது.
கரணவாய் பகுதியில் கோவிட் 19 கட்டுப்பாடுகளை மீறி கோழிப் பண்ணையில் கோழி வியாபாரம் நடைபெறுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. குறித்த இடத்திற்கு நேரில் சென்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பார்வையிட்ட போது சுமார் 30ற்கும் மேற்பட்டவர்கள் கட்டுப்பாடுகளை மீறி நிற்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் குறித்த கோழிப் பண்ணை 14 நாட்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.