Fri. May 17th, 2024

அத்தாய் பகுதியில் பிறந்த நாள் கொண்டாடிய 15 பேர் சுயதனிமைப்படுத்தலில்

வடமராட்சி அத்தாய் பகுதியில் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாடிய சுமார் 15 பேர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று வடமராட்சி அத்தாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கோவிட் 19 கட்டுப்பாடுகளை மீறி
அத்தாய் பகுதியில் பிறந்த நாள் நிகழ்வு நடைபெறுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்ப்பட்டது. இதனை ஊர்ஜிதப்படுத்த கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நெல்லியடி பொலீஸார் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டோர் தப்பி சென்றுள்ளனர்.  இதனால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டு சுமார் 15 பேர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்