Thu. May 16th, 2024

வடமராட்சியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லியடி பலசரக்கு வியாபாரி, முச்சக்கர வண்டி ஓட்டுநர் உட்பட வடமராட்சியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி சுகாதார பிரிவில் 4 பேருக்கும்,  பருத்தித்துறை சுகாதார பிரிவில் 7 பேருக்கும் என 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடி பகுதியில் முகக் கவசம் முறையாக அணியாமல் வியாபாரத்தில் ஈடுபட்ட நெல்லியடி பழைய சந்தை வியாபாரியை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டது. இவருக்கான PCR பரிசோதனை கடந்த 19 திகதி மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடி முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான எழுமாறான பரிசோதனையில் கரவெட்டி இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் சதோசாவில் பணிபுரிந்த கரணவாய் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கோப்பாய் பிரதேச சபையில் பணிபுரியும் கரணவாய் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோய் அறிகுறிகளுடன் சென்ற புலோலி மேற்கு இருவர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்