யாழ் மாவட்ட செயலக, பூநகரி பிரதேச செயலக, பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 61 பேருக்கு தொற்று
இன்று சனிக்கிழமை யாழ் மாவட்ட செயலகம், பூநகரி பிரதேச செயலகம், பல்கலைக்கழக மாணவர்கள், உட்பட வடமாகாணத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இருவருக்கும், யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர் ஒருவர் உட்பட யாழ் போதனா வைத்தியசாலையில் 13 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் மூவருக்கும், சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவருக்கும், நொதேண் தனியார் வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்பாய் சுகாதார பிரிவில் 7 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் 5 பேருக்கும், சாவகச்சேரி சுகாதார பிரிவில் 3 பேருக்கும், யாழ் வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் யாழ் சிறைச்சாலையில் இருவருக்கும் என யாழ் மாவட்டத்தில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கும், வவுனியா வைத்தியசாலையில் 5 பேருக்கும் என 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர் மூவருக்கும், கிளிநொச்சி வைத்தியசாலையில் இருவருக்கும், தர்மபுரம் வைத்தியசாலையில் ஒருவருக்கும் என 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் இருவருக்கும் என வடமாகாணத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.