யாழ் நியூமார்க்கெட்டில் 54 பேருக்கு தொற்று
யாழ் நியூமார்க்கெட்டில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நியூ மார்கெட்டைச் சேர்ந்த 464 பேருக்கான பரிசோதனைகள் முள்ளேரியா ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.