பருத்தித்துறையில் 4பேர் உட்பட 21 பேருக்கு கொரோனா
(முள்ளேரியாவில் யாழ் நியூ மார்கெட்டில் 460 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளியாகவில்லை)
யாழ் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட 702 பேருக்கான பரிசோதனையில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உத்தியோகத்தர் ஒருவர், நோயாளிகள் முவர் உட்பட நாலு பேருக்கும், யாழ் சிறைச்சாலையில் 8 பேருக்கும், யாழ் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் பிரிவில் இருந்த மூவருக்கும், மற்றும் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட யாழ் சுகாதார பிரிவில் இருவருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் ஒருவருக்கும், உடுவில் சுகாதார பிரிவில் ஒருவருக்கும் தெல்லிப்பளை சுகாதார பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.