யாழ் வர்த்தக நிலையங்கள் தீர்மானம் இரவு வெளியாகும்
இன்று இரவு தொற்றைப் பார்த்து யாழ் கடைகளை திறப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் இன்று இரவு வெளியாகும். இதனைப் பொறுத்தே எந்தெந்த கடைகளை திறப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொற்று ஏற்படாதவர்களின் வர்த்தக நிலையங்கள் நாளை காலை முதல் திறக்கப்படவுள்ளது.