மூத்த பத்திரிகையாளர் தில்லைநாதன் பிறந்த நாள் இன்று அல்ல
வடமராட்சியின் மூத்த பத்திரிக்கையாளர் சின்னத்துரை தில்லைநாதன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள் இல்லை. முகநூல்கள் மற்றும் சில இணையத்தளங்களில் தவறான முறையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சின்னத்துரை தில்லைநாதன் அவர்களிடம் தொடர் கொண்டு கேட்ட போது, எனது பிறந்த நாள் யூன் மாதம் 29ம் திகதி. ஆனால் எனது நண்பர்களில் யாரோ ஒருவர் முகநூலில் தவறுதலாக இன்று எனப் பதிவிட்டுள்ளார். இதனால் பலர் எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இவர் சுமார் 1968ம் ஆண்டளவில் பத்திரிகையாளராக பணிபுரியத் தொடங்கி சுமார் இற்றைக்கு 50.வருடங்களுக்கு மேலாக தனது சேவையை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.