மின்னல் தாக்கியதில் பஸ் சாரதி பலி
மின்னல் தாக்கியதில் இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை சாரதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று சற்று முன்னர் அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த, அல்வாய் பகுதியில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த மதனராசா (வயது 40 மதன்) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இரு பிள்ளைகளின் தந்தைதான இவர்
அச்சுவேலி நாவற்காடு பகுதியில் உள்ள தனது வயலை உழுது கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சடலம் அச்சுவேலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.