மின்சார வேலி தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்
மின்சார வேலியில் சிக்கி 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் இறந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்ஜோன் டிலரி கிவ் மேற்பிரிவில் நடைபெற்றுள்ளது. இப்பகுதியில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவ பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.