Fri. May 17th, 2024

நேற்றைய பரிசோதனை வடமராட்சியில் எவருக்கும் தொற்று இல்லை

வடமராட்சி பகுதியில் கொரோனா தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் எவருக்கும் கொரோனா இல்லை என முடிவு கிடைத்ததுள்ளது. வடமராட்சியில் கொரோனா தொற்றாளருடன் நேரடித் தொடர்பு கொண்டவர்களுக்கு  கரவெட்டி சுகாதார பணிமனையால் நேற்று திங்கட்கிழமை குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் 89 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எவருக்கும் கொரோனா இல்லை என முடிவு கிடைத்ததுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்