Fri. May 17th, 2024

மின்சாரம் எப்போது கிடைக்கும் – இலங்கை மின்சார சபை

நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடைக்கு இலங்கை மின்சார சபையின் தலைமையகத்தில் மின் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணம் என இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
மின்சார விநியோகத்தை துரிதப்படுத்தவும், மின்தடையை ஏற்படுத்தும் பிரச்சினைக்கு தீர்வு காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது.
லக்ஷபான, கொத்மலை மற்றும் சமனலவெவ பிரதான மின்விநியோக கட்டமைப்புகள் மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அத்துடன் சில பகுதிகளில் மின்சாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் மின்சாரத்தை முழுமையாக மீட்டெடுக்க சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகும் என்றும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்