Wed. May 15th, 2024

மகாஜன கல்லூரி 12 வயதுப் பெண்கள் கால்பந்தாட்டத்தில் சாதிப்பு

கேதாரணி,  யாழணி ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் சம்பியனாகியது தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி.

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 12 வயதிற்குட்பட்ட யாழ்மாவட்ட  பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் இன்று சாவகச்சேரி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணியை எதிர்த்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி மோதியது.
முதலாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இதில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி வீராங்கனை கேதாரணி ஒரு கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி 1:0 என முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்தில் தெல்லிப்பளை வீராங்கனை யாழணி அடுத்தடுத்து இரு கோல்களை பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்