Tue. May 21st, 2024

மந்திகை எரிபொருள் நிலையத்தில் நீண்ட வரிசையில் மக்கள்

வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றும் எரிபொருள் நிரப்புவதறக்காக மக்கள்  நீண்ட வரிசையில் கொழுத்தும் வெயிலிலும் காத்திருக்கின்றனர்.
வடமராட்சி நெல்லியடி, குஞ்சர்கடை, கிராமக்கோடு, பருத்தித்துறை துறைமுகம் ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத நிலையில் எரிபொருள் வழங்கப்படாத நிலையில்  மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டும் மக்கள் கொழுத்தும் வெயிலிலும் தமது  வாகனங்களுடன் காத்திருந்தனர்.
இன்று நாடு முழுதும் கதவடைப்பு கடைப்பிடிக்கும் நிலையிலேயே இன்று இவ்வாறு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்தவண்ணம் இருப்பதற்கு முறையாக எரிபொருள் வழங்கும் செயற்பாடு உரிய வகையில் நடைபெறாமையே காரணம் எனவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்