Fri. May 17th, 2024

மது என அசிட்டை அருந்தியவர் மரணம்

குடி போதையில் மது என நினைத்து அசிட்டை  அருந்தியவர் மரணமாகியுள்ள சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
லொறியொன்றின்  செயலிழந்த  பெட்ரியின் அமிலத்தை  மது என நினைத்து போதையில் பருகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில்  காலி- பட்டதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
லொறிக்கு அசிட் மாற்றுவதற்காக வாகனம் திருத்தும் கடைக்கு வந்தவர்கள். சட்ட விரோதமான மதுசாரம்,  சோடா, லொறிக்கு விடுவதற்கான அசிட் என்பவற்றை வாங்கி வந்துள்ளனர்.
வாகனம் திருத்தும் கடை உரிமையாளர் உட்பட மூவரும் மது அருந்திய வேளையில் அருகில் இருந்த அசிட்டை கடை உரிமையாளர் அருந்தி உள்ளார்.  அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் வாகன திருத்துமிடத்துக்கு  லொறியொன்றின் பெட்ரி அமிலத்தை மாற்றுவதற்கு வருகைத் தந்த மூவருடன், இந்த நபர் மதுபானம் அருந்தியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்